புழல்: சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சமூக தணிக்கை சார்ந்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஒன்றிய ஆணையர் குலசேகரன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில், ஒன்றியத்துக்குட்பட்ட முப்பத்தி ஒன்பது ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவதாஸ் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, அந்தந்த ஊராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தனர்.